Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த வாரம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உள்கட்சி விவகாரம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே, அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் என அ.தி.மு.க. தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அவைத்தலைவர் தேர்வு, உள்கட்சி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.